கூட்டாஞ்சோறு

பள்ளி விடுமுறை என்றாலே குழந்தைகள் அனைவரும் கூட்டாக சேர்ந்து வீட்டில் சமையலுக்கு வைத்திருக்கும் பொருள்களை எடுத்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடுவார்கள். கூட்டாஞ்சோறு செய்யும் போது சாதி மதம் இல்லாமல் அனைத்து குழந்தைகளும் அந்த நேரத்தில் சந்தோசமாக இருப்பார்கள். நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சமைத்த கடைசி தலைமுறையினர் நாமாகத்தான் இருப்போம். இன்றைய கால கட்டத்தில் கூட்டாஞ்சோறு என்பதெல்லாம் மொத்தமாக மாறி குழந்தைகள் பாஸ்ட் புட் கடைகளில் வாங்கி சாப்பிடுவதில் ஆர்வத்தை செலுத்திவிட்டார்கள். சிறிய வயதில் செய்து விளையாண்ட கூட்டாஞ்சோறு சமையலை சிட்னியில் மீட்டு உருவாக்குவதின் மூலம் சிட்னி வாழ் தமிழர்களுக்கு இணைப்பு பாலமாக செயல் படுவதே STM யின் நோக்கம்

Date

Feb 25 2024

Time

08:00 - 18:00
QR Code

Leave your comments